மேலும்

ரெலோவில் இருந்து வெளியேறினார் சிவாஜிலிங்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோவில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சிறீகாந்தாவுக்கு அறிவித்துள்ளார்.

கட்சியின் அனுமதியின்றி அதிபர் வேட்பாளராக போட்டியிடும், எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ரெலோ அறிவித்திருந்தது.

அதேவேளை, போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் ரெலோ அமைப்பின் மத்திய குழு அவருக்கு காலக்கெடு அளித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று ரெலோவில் இருந்து விலகிக் கொள்வதாக ரெலோ செயலாளர் சிறீகாந்தாவிடம், சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.

அதேவேளை, சிவாஜிலிங்கத்தின் விலகல் கடிதம் கிடைத்துள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ள ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அதனை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *