மேலும்

சுதந்திரக் கட்சி -கோத்தா இடையே இன்று புரிந்துணர்வு உடன்பாடு

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

கொழும்பில் இன்று காலை 10 மணிக்கு இந்த உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது.

இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்சவுடன் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச தனியாக அரசியல் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவது இதுவே முதல்முறையாகும்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் வகையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *