மட்டக்களப்பு தேவாலயத்திலும் குண்டுவெடிப்பு – 25 பேர் பலி, 300 பேர் காயம்
மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்றிலும் இன்று காலை குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் காயமடைந்த 200பேருக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.