இந்தியா – சிறிலங்கா பயணிகள் கப்பல் சேவை – இன்னமும் திட்டமிடல் நிலையில் தான்
இந்தியா- சிறிலங்கா இடையிலான, பயணிகள் கப்பல் சேவை இன்னமும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மீண்டும் படகுச் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை பெரிதும், ஊக்கவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள், சிறிலங்கா வரும் வாய்ப்புக் கிட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.