அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்
ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நல்லெண்ணப் பயணமாக இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இகாசுசி என்ற இந்தப் போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
ஜப்பானியப் போர்க்கப்பல் மூன்று நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்றும், இதன்போது இரு நாடுகளின் கடற்படையினரும் கூட்டாக பல நிகழ்வுகளில் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.