மேலும்

மன்னிப்புக் கோரினார் பொன்சேகா – உறுதிப்படுத்துகிறார் ராஜித

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மன்னிப்புக் கோரினார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“சிறிலங்கா அதிபருக்கு எதிராக அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சரத் பொன்சேகா சிறிலங்கா அதிபரிடம் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரினார்” என்று கூறினார்.

பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தியது தவறு என்று சரத் பொன்சேகா கூறிய கருத்துக்கே மன்னிப்புக் கோரினார் என்றும் ராஜிழத சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *