சிறிலங்காவில் அமெரிக்க இராணுவ பயிற்சி அதிகாரிகள் குழு
அமெரிக்க இராணுவ பயிற்சி அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவ ஒதுக்குப்படை அதிகாரிகள் பயிற்சிப் படையணியைச் சேர்ந்த 33 அதிகாரிகள் இரண்டு வாரகாலப் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.
இவர்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, தியத்தலாவ பயிற்சி முகாமில், வரும் ஜூன் 7ஆம் நாள் வரை உள்ள ஆயுதங்களைக் கையாள்வது, களமுனை நடைமுறைகள், உடற்பயிற்சி, உள்ளிட்ட பயிற்சிகளை சிறிலங்கா இராணுவம் வழங்கவுள்ளது.
அமெரிக்க இராணுவ பயிற்சி அதிகாரிகள் , சிறிலங்கா இராணுவ அகடமி, மேற்குப் பிராந்திய இராணுவத் தலைமையகம், பொறியியல் படைப்பிரிவின் தலைமையகம், இலகு காலாற்படை தலைமையகம், மின்னேரியாவில் உள்ள ஆட்டிலறி பாடசாலை உள்ளிட்டவற்றுக்கும் சென்று பாரை்வையிடவுள்ளனர்.