நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைக்கும் செயலகத்தை வலுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படும், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தச் செயலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனித வளங்கள் மற்றும் நிதிகளை வழங்குவதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த செயலகம் பல்வேறு, திட்டங்களை மேற்கொள்வதாகவும், தமது பணிகளை மேற்கொள்வதற்கு இந்தச் செயலகத்துக்கு மனித வளங்கள் மற்றும் நிதிகள் தேவைப்படுவதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.