மேலும்

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை

boat_yardகாரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் நாளை இந்த தொழிற்சாலைக் கட்டுமானப் பணி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அனைத்துலக கடற்பரப்பில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான 55 அடி நீளமுள்ள படகுகளைத் தயாரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, காரை நகரில் புதிய படகு கட்டுமான தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது.

சிறிலங்காவின் மீன் உற்பத்தியில் வடக்கு மாகாணம் முதன்மையான பங்கை வகித்து வரும் நிலையில், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *