மேலும்

78 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

protest-magazinசிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 தமிழ் அரசியல் கைதிகள், நேற்றுக்காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தமது விடுதலையை விரைவுபடுத்தக் கோரி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 தமிழ் அரசியல் கைதிகளும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  24 அரசியல் கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 அரசியல் கைதிகளும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகளும் நேற்றுக்காலை 6 மணிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும், மகசின் சிறைச்சாலைக்கு முன்பாகவும், யாழ். பேருந்து நிலையத்தின் முன்பாகவும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

protest-magazin

இந்தப் போராட்டங்களில் அரசியல் கைதிகளை விடுதலைக்காக போராடும் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *