மேலும்

நான்கு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் சிங்கப்பூரில் பேச்சு நடத்தியது சிறிலங்கா குழு

srilanka-sangirila (1)சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, இந்தியா, பிரித்தானியா, தாய்லாந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் சங்கிரி லா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்றுள்ள, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான குழுவினர், அங்கு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களை சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இன்று தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரவிட் வொங்சுவொன், பிரித்தானியாவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மைக்கேல் பலோன், சிங்கப்பூரின் இரண்டாவது பாதகாப்பு அமைச்சர் லூயி டக் யூ,  இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் ஆகியோரை சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

srilanka-sangirila (1)

srilanka-sangirila (3)srilanka-sangirila (4)

இதன்போது பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்புக்களின் போது சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நல்லிணக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து ருவான் விஜேவர்த்தன எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *