தமிழ்நாடு முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுனர் ரோசைய்யா முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
காலை 11 மணிக்குத் துவங்கிய விழா, 26 நிமிடங்களில் நிறைவடைந்தது.