ஊவா முதல்வராக ஹரீன் – ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து கடைசி அதிகாரமும் பறிபோனது
ஊவா மாகாண முதலமைச்சராக ஐதேகவின் ஹரீன் பெர்னான்டோ இன்று மதியம் ஆளுனர் நந்தா மத்தியூ முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் மயிரிழைப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருந்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சசீந்திர ராஜபக்ச.
அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச தோல்வி கண்டதையடுத்து ஊவா மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள், ஐதேகவுக்கு ஆதரவளிக்க முன் வந்தனர்.
இதையடுத்து, ராஜபக்ச குடும்பத்தின் கையில் இருந்த கடைசி அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஊவா மாகாண முதலமைச்சராக ஹரீன் பெர்னான்டோ பதவியேற்றுள்ளார்.