புதனன்று கூட்டத்தில் 5 தமிழ்க்கட்சிகளின் இறுதி முடிவு
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, ஐந்து தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் மூன்றரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திய போதும், இறுதி முடிவு எடுப்பதை, நாளை வரை பிற்போட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான முடிவை எடுப்பதற்காக, ஐந்து தமிழ்க் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் மூன்றரை மணி நேரம் பேச்சுக்களை நடத்திய போதும், இறுதி முடிவு எடுப்பதை, நாளை வரை பிற்போட்டுள்ளன.
தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்துக்கு செல்லத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம் எனப்படும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தேர்தலாக, இந்த முறை நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை ஆபத்தான ஒன்றாகவும், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அரசியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் சிலரும் கருதுகிறார்கள்.
சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் நாள் இடம்பெற்ற அரசியலமைப்புச் சதியின், முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டுள்ளார்.
போரின் போது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து சிறிலங்கா படையினரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான – யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த 17ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும், புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.