மேலும்

Archives

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப்பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரை சந்தித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஐ.நா பொது அமர்வுக்குப் புறம்பாக நேற்றைய தினம் இடம்பெற்றது.

மோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா போரின் மீது புதிய விசாரணைகளைத் தூண்டும் ஐ.நா அறிக்கை – பாகம் 1

மல்லராஜன் றஜீபா மற்றும் அவரது தம்பியான கானகன் ஆகியோர் மே 15 அன்று பதுங்குகுழியில் தஞ்சமடைந்திருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் முறையே  பத்து மற்றும் ஏழு வயதாகும். இவர்களது பெற்றோர்கள், நான்கு சகோதரர்கள் ஆகியோர் எறிகணை வீச்சின் போது பதுங்குகுழியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

மட்டு. புன்னைக்குடாவில் நேற்றுமாலை சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல்

சிறிலங்காவின் முப்படைகள், மற்றும் வெளிநாட்டுப் படையினர் என, 2900 படையினர் பங்கேற்ற நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் இறுதி நாளான நேற்று, மட்டக்களப்பு  புன்னைக்குடாவில் முப்படைகளும் பங்கேற்ற பாரிய தாக்குதல் பயிற்சி ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் புறப்பட்டார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

கி.பி. அரவிந்தன் தமிழர் வாழ்வியலின் ஒரு குறியீடு

ஈழப் போராட்ட முன்னோடி, கவிஞர், ஊடகவியலாளர் கி.பி. அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான கி.பி. அரவிந்தன் – ஒரு கனவின் மீதி அறிமுக நிகழ்வு, கடந்த சனிக்கிழமை சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரிலுள்ள ஞானலிங்கேச்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

மூன்றாவது இந்திய – சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிறைவு

புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான மூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டுபட்ட நிலையில் அனைத்துலக சமூகம் – ஜெனிவா கூட்டத்தில் நடந்தது என்ன?

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக அமெரிக்கா தயாரித்துள்ள தீர்மான வரைவுக்கு எதிராக – சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,  கியூபா ஆகிய நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.