மேலும்

Tag Archives: ஸ்டீபன் டுஜாரிக்

சிறிலங்கா நிலவரம் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கரிசனை

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை, உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரி மீதான போர்க்குற்றச்சாட்டு – மௌனம் காக்கும் சிறிலங்கா அரசாங்கம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் – ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்

சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எல்லாத் தரப்புடனும் ஆலோசித்தே ஐ.நா உதவும் – பான் கீ மூனின் பேச்சாளர்

ஐ.நாவின் எந்த திட்டமும், சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி

சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் என்பதே ஐ.நாவின் நிலைப்பாடு – பான் கீ மூனின் பேச்சாளர்

உள்நாட்டு விசாரணைகளை நடத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நா பொதுச்செயலர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எமக்கு புத்திகூற வேண்டாம் – ஐ.நா பேச்சாளர் மீது பாய்கிறது சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் கருத்தை அவரது பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள் குறித்து ஐ.நா கவலை

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கவலை வெளியிட்டுள்ளார்.