மேலும்

Tag Archives: ரணில் விக்கிரமசிங்க

ரணிலின் பதவியை பறிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்கச் செய்யும், உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், யாதுரிமைப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது – மகிந்த அணி வைக்கும் ‘செக்’

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரணிலை நீக்கியதற்கு எதிரான வழக்கு – ஜனவரியில் விசாரணை

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கு எதிராக தம்பர அமில தேரர் தாக்கல் செய்துள்ள மனு மீதுான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 07ஆம் நாளுக்கு ஒத்திவைத்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்குமா கூட்டமைப்பு? – இன்று முடிவு

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு நாடாளுமன்றத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரவுள்ள  நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல்

தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.

கொழும்பில் ஒரு இலட்சம் பேரைக் குவிக்கிறது ஐதேக

கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் மகிந்த

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை ஏற்கமாட்டேன் – சஜித் பிரேமதாச

தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமிக்கத் தயார் – சிறிலங்கா அதிபர் செவ்வி

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

மைத்திரியை இன்று சந்திக்கிறார் ரணில்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்துப் பேசவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.