மகிந்தவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் இழுபறி – நாளைய நிகழ்வு ஒத்திவைப்பு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், தேர்தல் அறிக்கை வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின், தேர்தல் அறிக்கை வெளியீடு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.
ஈராக்கிலோ, லிபியாவிலோ, எகிப்திலோ நிகழ்ந்தது போன்று சிறிலங்காவில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தன்னுடன் பகிரங்கமான நேரடி விவாதம் நடத்த வருமாறு, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்து விட்டார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே மாதிரியான உரையையே நிகழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவின் வரலாற்றில் தேர்தல் பரப்புரைகளுக்கு முதன்முறையாக, முப்பரிமாணத் தோற்றத்தை அளிக்கும், ஹொலோகிராம் தொழில்நுட்பம் (Hologram technology) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வலையமைப்புகளால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2005ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்று, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கும் அநீதி இழைக்கப்பட்டதாக, பொதுக்கூட்டம் ஒன்றில் பகிரங்கமாக புலம்பியிருக்கிறார் சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச.
தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.