மேலும்

Tag Archives: புலனாய்வு

முன்னாள் கடற்படைத் தளபதி குறித்த விசாரணைகளை தடுக்க முயற்சி

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர்  அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று கையளிக்கப்படும்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடிதத்தால் சிக்கிய முன்னாள் கடற்படை தளபதி- விளக்கமறியல் நீடிப்பு

இளைஞன் ஒருவரைக் காணாமல் ஆக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்னவை, மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருண ஜயசேகர பதவியில் இருப்பது நம்பகத்தன்மையை பாதிக்கும்

மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு முறைப்பாடு- விசாரணையை வரவேற்கிறார் சிறிதரன்

வருமானத்திற்கு அதிகமாக, அதிகளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சஹ்ரான் பற்றிய தகவல்களை புறக்கணித்தவர் அருண ஜயசேகர

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண  ஜயசேகர, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட தகவல்களைப் புறக்கணித்தார் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அநீதிக்கு உள்ளானதாலேயே ஷானி சிஐடி பணிப்பாளராக நியமனம்

முன்னைய அரசாங்கங்களின் காலத்தில், மோசமான அநீதிக்கு உள்ளானதால், மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மீண்டும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாக சிறிலங்கா பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபால, தெரிவித்துள்ளார்.

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வு பகிர்வு உடன்பாடு

ஓமானுடன் சிறிலங்கா புலனாய்வுப் பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்பட்ட சாரா ஜஸ்மின் அமிலத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் நடக்கப் போவது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் ( சிவநேசதுரை சந்திரகாந்தன்) முன்னரே அறிந்திருந்தார் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.