சென்னை வெள்ளத்துக்கு பலியானோரின் சடலங்கள் திருகோணமலைக் கடலில் மிதக்கின்றன?
திருகோணமலைக் கடலில் சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல்களை நடத்தி வருகின்றன.
திருகோணமலைக் கடலில் சடலங்கள் மிதப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்து, சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல்களை நடத்தி வருகின்றன.
பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகருக்கான விமான சேவைகள் வரும் 8ஆம் நாள் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமானசேவை அறிவித்துள்ளது.
சென்னையில் ஏற்பட்டள்ள பெருவெள்ளத்தினால், இந்தியாவின் பழம்பெரும் நாளிதழான ‘தி ஹிந்து’ 137 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வெளிவரவில்லை. அத்துடன் ஜெயா மற்றும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிகளும் சேவையை நிறுத்தியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக விடாமல் கொட்டி வரும் மழையால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள அதேவேளை, சென்னை நகரம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.
இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில், தொடருந்துப் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து இந்திய மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல்துறை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா, ஐந்தாவது தடவையாக இன்று பதவியேற்றார். அவருடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா நாளை பதவியேற்கவுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையடுத்து, அவர் முதலமைச்சராகப் பதவியேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றுகாலை தனது பதவியை விட்டு விலகினார்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்தும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், தாம், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்தார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர். பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு 9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.