மேலும்

Tag Archives: சீனா

வலுவான சிறிலங்காவைப் பார்க்க விரும்புகிறது அமெரிக்கா – தோமஸ் சானொன்

சிறிலங்காவின் தொடர் முன்னேற்றங்களைக் கொண்டு, தமது உறவுகளை வரும் ஆண்டுகளில் மேலும் விரிவுபடுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக பிரேரிக்கப்பட்டுள்ள தோமஸ் சானொன் தெரிவித்துள்ளார்.

சீனாவையும், அதனை நிதியையும் மீண்டும் ஒருமுறை வரவேற்கிறது சிறிலங்கா

யுத்தத்தின் இறுதி வாரங்களில் சிறிலங்காவின் போர் வலயத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்குலக நாடுகள் முன்னெடுத்த வேளையில், இந்த இடைவெளியை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டது.

இந்தியாவிடம் தொடருந்துகள் கொள்வனவு செய்யும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – சீனாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் உதவின – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

தூதரகங்களில் மீண்டும் அரசியல் நியமனங்கள் – நியாயப்படுத்துகிறது சிறிலங்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய தூதுவர்களில் எட்டுப் பேர் துறைசார் இராஜதந்திரிகள் அல்ல என்றும், அரசியல் ரீதுியாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி

சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.

இந்துமாக் கடலில் இராணுவக் கட்டுப்பாட்டை விரிவாக்க முனையும் சீனா

அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும்.

சீனாவின் உறவு சிறிலங்காவுக்கு முக்கியம் – அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக்கொள்வது மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவின், நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீளாய்வு – சீனாவுக்கான நிலஉரிமை பறிப்பு

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு மீளாய்வு செய்யப்படும் என்றும், அதில் 20 ஹெக்ரெயர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது உள்ளிட்ட பல உட்பிரிவுகள் நீக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.