இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு
கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.
கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான நிலைப்பாட்டை சிறிலங்கா பொதுஜன முன்னணி தளர்த்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர், ஊடகவியலாளர்களுடனான தனது முதலாவது சந்திப்பின் போது, வாய் தடுமாறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமானவர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கியை சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று எதிரணிக்குத் தாவவுள்ளனர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.