மேலும்

Tag Archives: சந்திரிகா குமாரதுங்க

மகிந்தவை நிறுத்துவதற்கு சுதந்திரக் கட்சி முடிவெடுக்கவில்லை- சந்திரிகா

தாம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்தாலும், அவருக்கு போட்டியிட வாய்ப்பளிப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க போட்டியில் குதிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்புடன் மைத்திரி அவசர சந்திப்பு – அரசியல்தீர்வு குறித்து தொடர்ந்து பேச இணக்கம்

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைதியை வெற்றி கொள்ளவில்லை – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா

சிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் – தூக்கி வீசப்பட்டார் கருணா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு அடுத்த அடி – சுதந்திரக் கட்சித் தலைமை மைத்திரி வசம்

கொழும்பில்  இன்று மாலை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தோல்விக்குப் பின் மகிந்தவை வெளியேற்ற சந்திரிகா வைத்துள்ள இரகசியத் திட்டம்

அதிபர் தேர்தலில், தோல்விடைந்த பின்னர், பதவியை விட்டு விலக மகிந்த ராஜபக்ச முன்வராது போனால், அவரை வெளியேற்றுவதற்கு எதிரணியிடம் ஒரு இரகசியத் திட்டம் இருப்பதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

திரு.பிரபாகரன் என்று அழைத்ததை மறந்து போனாரா மகிந்த? – மங்கள சமரவீர கேள்வி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி உள்ளிட்ட மகிந்தவின் அமைச்சர்கள் பலரும் எதிரணிக்கு பாய்கின்றனர்

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இந்தவாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.