மேலும்

Tag Archives: இந்தியா

இந்தியாவின் போரையே மகிந்த முன்னெடுத்தார் – நாமல் ராஜபக்ச

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சார்க் நாடுகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார் சரத் அமுனுகம

சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரத் அமுனுகம நேற்று, சார்க் நாடுகளின், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மாலைதீவு, நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட சிறிய தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்தும் போரிடுகின்றன.

20 நாடுகளின் தூதுவர்கள் அலரி மாளிகையில் ரணிலுடன் சந்திப்பு

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா கடற்படையின் அழைப்பை 35 நாடுகள் நிராகரிப்பு

கொழும்பில் சிறிலங்கா கடற்படை நடத்தும், காலி கலந்துரையாடலில் இம்முறை அதிகளவு நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு

உண்மை மற்றும் நீதி ஆணைக்குழு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகச் செய்திகள் பொய் – இந்திய வெளிவிவகார அமைச்சு

தம்மைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.