மேலும்

Tag Archives: அஸ்கிரிய

கூட்டமைப்பைச் சந்திப்பது மகிழ்ச்சி – அஸ்கிரிய பீட பதிவாளர்

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க எடுத்துள்ள முடிவைப் பாராட்டுவதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரும், அஸ்கிரிய சங்க சபாவின் மூத்த குழு உறுப்பினருமான வண. மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழு மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது

சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று  மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீடம்

தற்போது புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் காரக்க சங்க சபா தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் – மகாநாயக்கர்களிடம் உறுதி

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை சிறிலங்கா அரசாங்கம் பாதுகாக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, உறுதியளித்துள்ளார்.

கண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

உரிமைக்காக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவியது அரசாங்கம் – மகிந்த கூறுகிறார்

அம்பாந்தோட்டையில் தமது காணி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடிய மக்களின் மீது சிறிலங்கா அரசாங்க குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.

வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று,  சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – ஒப்புக்கொள்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.