மேலும்

Tag Archives: அவுஸ்ரேலியா

பிரேசிலை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஜெனரல் ஜயசூரிய? – சந்தேகம் கிளப்பும் தூதுவர்

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-

கொழும்பில் நாளை தொடங்குகிறது இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான உயர்மட்டக் குழு புதுடெல்லியில் இருந்து கொழும்பு வரவுள்ளது.

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி

அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

தமிழ் அகதிகளுக்கு குடியேறும் வாய்ப்பை மறுக்கும் அமெரிக்காவின் தேசப்பற்று சட்டம்

நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் அவுஸ்ரேலிய போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அன்சாக் வகையைச்  சேர்ந்த, எச்எம்ஏஎஸ் அருந்த என்ற போர்க் கப்பலை நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது.

படகில் வந்த 20 அகதிகளை கொழும்புக்குத் திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 20 அகதிகள் வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 10 மீட்புப் படகுகளை அனுப்பியது அவுஸ்ரேலியா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு, அவுஸ்ரேலிய அரசாங்கம் முதற்கட்டமாக 10 இறப்பர் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கொண்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

வெறுப்புணர்வைத் தூண்டுவோரை தண்டிக்க வேண்டும் – சிறிலங்காவுக்கு மேற்குலகம் அழுத்தம்

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றங்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலக இராஜதந்திரிகள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.