மேலும்

Tag Archives: அவுஸ்ரேலியா

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இணைந்து இந்தியா பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்துள்ள சூழலில், 16 நாடுகளின் கடற்படைகளை இணைத்துக் கொண்டு, இந்தியா பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் மார்ச் 6ஆம் நாள் ஆரம்பித்து, எட்டு நாட்கள் இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.

முன்னாள் போராளியை நாளை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) நாளை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்.

அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள 197 அகதிகளை கொழும்புக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை

அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நௌரு, பபுவா நியூகினியா, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்கவுள்ளது அவுஸ்ரேலியா

சிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா உதவி வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், இதற்கான உறுதிமொழியை அளித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா

சிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிராப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.

கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.

மனுஸ் தீவில் உயிரிழந்த தமிழரின் உடலை ஒப்படைக்க 9 ஆயிரம் டொலர் கேட்கிறது அவுஸ்ரேலியா

மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞரின் உடலை  ஒப்படைப்பதற்கு 9 ஆயிரம் டொலர்களைத் தர வேண்டும் என்று உறவினர்களிடம்  அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.