மேலும்

Tag Archives: திருகோணமலை

சீனாவுடனான நட்பினால் இந்தியாவை இழக்கமாட்டோம் – சிறிலங்கா பிரதமர்

சீனாவுடனான சிறிலங்காவின் நட்பு, இந்தியாவை இழக்கச் செய்து விடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை  கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா – இந்தியா இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைககள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவுடன் நெருங்கிய உறவை விரும்புகிறது சிறிலங்கா – மங்கள சமரவீர

சீனாவுடன் நெருங்கிய வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விருப்பம் கொண்டுள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்

திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மகிந்த எச்சரிக்கை

போர் வெற்றியைக் காட்டிக் கொடுக்கும் புதிய அரசியலமைப்புக்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவில் துறைமுகங்கள், நிலங்களை வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.