மேலும்

Tag Archives: சீனா

சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா

சீன ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான இந்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் முக்கிய பௌத்த பிக்குகளை புதுடெல்லிக்கு அழைத்து, நாலந்தா மரபு பிக்குகளுடன், பேச்சுக்களை நடத்த இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

சீன முதலீட்டாளர் நலன்களை சிறிலங்கா பாதுகாக்க வேண்டும்- வலியுறுத்துகிறது சீனா

சீன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்குமாறும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஊக்குவிக்குமாறும், சிறிலங்காவிடம், சீனா இன்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவுக்கு உரிமையாகப் போகும் சிறிலங்கா வான்பரப்பு – சிக்காகோ பிரகடனத்தால் சிக்கல்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்கா தனது வான் பிராந்தியத்தின் ஒரு பகுதியை சீனாவிடம் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமரைக் கோபுர நிர்மாணமும் மீளாய்வு – சீனாவுக்கு அடுத்த சோதனை?

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும், தாமரைக் கோபுரம் நிர்மாணப் பணி குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா?

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும்.

சீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சீன நிறுவனங்களுக்கு இனி முன்னுரிமைச் சலுகைகள் கிடையாது – சிறிலங்கா நிதியமைச்சர்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், கொடுக்கப்பட்டதைப் போன்று முன்னுரிமைச் சலுகைகள், சீன நிறுவனங்களுக்கு இனிமேல் சிறிலங்காவில் வழங்கப்படாது என்று, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை பாதுகாக்க சீனா இராஜதந்திர ரீதியாக முயற்சி

சிறிலங்கா அரசாங்கத்தினால், இடைநிறுத்தப்பட்ட 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்ட உடன்பாட்டைப் பாதுகாப்பதற்கு, சீனா தனது இராஜதந்திர முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்

உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிப்போம் – சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரத்தை சிறிலங்கா  பொருத்தமான முறையில் தீர்க்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா எடுத்துள்ள முடிவு குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.