மேலும்

Tag Archives: கடற்படை

400 பில்லியன் ரூபாவை நெருங்கும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம்

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலில் தமிழ்நாடு மீனவர் மரணம் – சடலம் யாழ்ப்பாணத்தில்

நெடுந்தீவுக் கடலில் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இந்திய மீனவர் ஒருவரின் சடலம் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு புதிய தளபதி

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – 2 கடற்படையினர் கைது

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பாவித்த கப்பல்கள் நன்றாகவே உள்ளன – சிறிலங்கா கடற்படை

ஏனைய நாடுகளின் கடற்படைகள் பயன்படுத்திய கப்பல்களை நல்ல நிலையிலேயே சிறிலங்கா கடற்படை பெற்றுக் கொள்கிறது என்று சிறிலங்கா கடற்படையின்  தலைமை அதிகாரி றியர் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

2019 இல் 306.1 பில்லியன் ரூபாவை விழுங்குகிறது பாதுகாப்பு செலவினம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை  அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

முப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.