மேலும்

Tag Archives: அரசியலமைப்பு

சட்டங்களை மதத் தலைவர்களே தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் நாங்கள் எதற்கு? – சுமந்திரன்

அரசியலமைப்புச் சட்ட வரைவை மக்கள் முன் வைத்து, அவர்களின் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

அரசியலமைப்பு மாற்றத்துக்கு 6.2 மில்லியன் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்– ஜேவிபி

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு 6.2 மில்லியன் மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களும் சங்க சபாக்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு வரைவு கூட்டத்தில் சம்பந்தன்- நிமல் சிறிபால டி சில்வா சூடான வாக்குவாதம்

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு  ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த இடைக்கால அறிக்கை – அடுத்த மாத இறுதியில் விவாதம்

அரசியலமைப்பு பேரவையில், அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான விவாதம் ஜூன் மாத இறுதியில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தனுடன் பிரித்தானியத் தூதுவர் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா அவசரமாக நிறைவேற்ற வேண்டும் – ஜேர்மனி

ஜெனிவாவில் 2015இல் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் இறைமை, சுதந்திரத்தைப் பாதுகாப்பது சீனாவின் கடமை – சீன அரசின் உயர் பிரதிநிதி

சிறிலங்காவுடனான 60 ஆண்டுகால உறவுகளை பலப்படுத்தும் வகையில், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும், அதன் சுதந்திரம் மற்றும் இறைமையைப் பாதுகாக்கவும் சீனா கடமைப்பட்டுள்ளது என்று சீனாவின் உயர் அரசியல் ஆலோசகர் உறுதியளித்துள்ளார்.