மேலும்

Tag Archives: அமெரிக்கா

அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பது, தமிழர் தரப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு சிறிலங்காவுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்கா வெளியேறியது சிறிலங்காவுக்கு சாதகம் – ராஜித சேனாரத்ன

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, சிறிலங்காவுக்குச் சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க தூதரகம்

மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, அதிபர் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுத்துள்ளது.

சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க ஆர்வம்

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவரான மக் தோன்பெரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா

சிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க குடியுரிமையை கைவிட பசிலும், கோத்தாவும் விண்ணப்பித்தனரா?

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்வதற்கு விண்ணப்பித்தார்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அஷூ மாரசிங்க கோரியுள்ளார்.

சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

அமெரிக்காவின் வளர்ச்சியால் சிறிலங்காவுக்கு பாதிப்பு – ரணில்

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி  சிறிலங்கா மற்றும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.