மேலும்

இராணுவத்துக்குள் மகிந்த விசுவாசிகளை களையெடுப்பது எப்படி?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா காவற்துறையினரால் கதிர்காமத்தில் உள்ள பாதயாத்திரிகள் தங்குமிடத்திலிருந்து ஆபத்தான வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தற்கொலை அங்கி ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. இத்தற்கொலை அங்கி சிறிலங்காவின் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ கண்டெடுக்கப்படவில்லை.

ரணில் நாடு திரும்பியதும் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் குறித்து இறுதி முடிவு

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து கடன்களைப் பெறுவது பேச்சுக்களில், சிறிலங்கா பிரதமர் சீனாவில் இருந்து நாடு திரும்பியதும், இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜி-7 மாநாட்டு பாதுகாப்பு- ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு சிறிலங்காவுடன் ஆலோசனை

ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை இவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பிரகீத் கடத்தல் வழக்கு- கையொப்பத்தை மாற்றி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தப்பிக்க முயற்சி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் தமது கையொப்பங்களை மாற்றியிருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் திட்டங்களை விரைவுபடுத்த மூவர் அணியை நியமித்தார் ரணில்

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகளையும் திட்டங்களையும் விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட மூவர் அணியொன்றை நியமித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவுக்கான உதவிகள் தனிநபர்களையோ கட்சிகளையோ சார்ந்ததாக இருக்காது – சீன அதிபர்

சிறிலங்காவுக்கான சீனாவின் உதவிகள், கொள்கைகளின் அடிப்படையிலும், சிறிலங்கா மக்களின் நலன் அடிப்படையிலுமே இருக்குமே தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர திட்டத்தை விரைவுபடுத்த சீனா- சிறிலங்கா இணக்கம் – இழப்பீடு குறித்து சீனா மௌனம்

முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சீனா இடையே ஏழு உடன்பாடுகள் கைச்சாத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

மகிந்த, கோத்தாவின் இராணுவ பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும்- சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

மீண்டும் வெற்றிலையில் சங்கமிக்கிறது ஈபிடிபி?

இனிவரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஈபிடிபி கட்சியும் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.