மேலும்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்”

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் விமானப்படையினர் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாக இருந்த கொமடோர் அஜித் போயகொடவின் அனுபவங்கள்

எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம்.

காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்

காணாமற்போனோர் பணியக சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்ட பின்னர், இந்தப் பணியகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மிக் ஆவணங்கள் காணாமற்போனமை குறித்து முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை

மிக்-27 போர் விமானங்களின் கொள்வனவு தொடர்பான மூல ஆவணம் காணாமற்போனமை குறித்து, 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியில் இருந்த முன்னாள் விமானப்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

அணிசேரா உச்சி மாநாடு, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் சிறிலங்கா தூதுவர் ஸ்கந்தகுமார்

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அமைச்சர்களுடன் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமற்போனோர் பணியக சட்டத்துக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினர் போராட்டம்

காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி, தேசிய போர் வீரர்கள் அமைப்பு, வீரலங்கா பவுண்டேசன் ஆகியவற்றின் தலைமையில் சிறிலங்கா படையினர் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரியை விடுவிக்குமாறு கோரிக்கை

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது.