மேலும்

மகிந்த அணியினர் 8 பேரின் அமைப்பாளர் பதவிகள் பறிப்பு

மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர்கள் எட்டுப் பேரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.

அமைதித் தீர்வுக்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரே வழி – விக்னேஸ்வரன் செவ்வி

நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதுவரின் யாழ். பயணத்தால் வடக்கு மக்களுக்கு நன்மையில்லை – சி.வி.கே

அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பின் யாழ்ப்பாண பயணம், வட மாகாண மக்களுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என்று, வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் விளைவுகளை விரைவில் எதிர்கொள்வார் கோத்தா – சரத் பொன்சேகா எச்சரிக்கை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் முடிந்து விட்டதாகவும், அதன் விளைவுகளை அவர் விரைவில் எதிர்கொள்வார் என்றும், சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுகிறார் மகிந்த

வரப்போகும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியுமா என்று தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் உதய கம்மன் பில ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர.

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கவில்லை – அன்ரனி ஜெகநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்தார் அன்ரனி ஜெகநாதன்

வவுனியாவில் நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயகநாதன், ஒலிவாங்கியை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.