சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்திய மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தராமனின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
சம்பூர் அனல் மின் திட்டம் நிறுத்தப்பட்டதால், சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகள் பாதிக்கப்படாது என்றும், அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் சிறிலங்காவில் 2 பில்லியன் டொலர் முதலீடுகளை இந்தியா மேற்கொள்ளும் என்றும் இந்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக, சிறிலங்கா தேயிலைச் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனைத் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் உடல் மேலதிக பரிசோதனைகளுக்காக நேற்று மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.