மேலும்

சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது – பான் கீ மூனின் பேச்சாளர்

farhan haqசிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நியூயோர்க்கில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, ஐ.நா பொதுச்செயலரோ, அனைத்துலகத் தலைவர்களோ தமக்கு அழுத்தங்களைக் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த கருத்து தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக், “ சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் நிலைப்பாடு தெளிவானது. ஐ.நாவினால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிக்கைகளிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நாவின் எண்ணங்கள் என்ன என்பது குறித்து எவரும், கருத்துக்களை வெளியிடலாம்.

ஆனால், ஐ.நாவின் உண்மையான நிலை தெளிவானது என்பதை அதன் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *