மேலும்

தமிழர்களை கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு பணிப்பாளர் விரைவில் கைது

கொழும்பில் இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

மகசின், அனுராதபுர சிறைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போனோருக்கான பணியகம் விரைவில் உருவாக்கப்படும்- மங்கள சமரவீர

காணாமற்போனோர் பணியகத்தை நிறுவும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் விரைவாக முன்னெடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

வவுனியாவில் நான்கு நாட்களாக, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம், சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து இன்று மாலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் நல்லூரில் அடையாள உண்ணாவிரதம்

வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம் யாழ்ப்பாணத்தில் திறப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைப் பணியகம், இன்று காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், திறந்து வைக்கப்பட்டது.

இந்தியப் பிரதமரின் செய்தியுடன் வந்தார் தரன்ஜித் சிங்? – மங்கள சமரவீரவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மயக்கம் – மைத்திரிக்கு விக்கி அவசர கடிதம்

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் நேற்றுமாலை மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க சுவாமிநாதனை அனுப்புகிறார் ரணில்

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை, சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மிலேனியம் சவால் நிதிய உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் ஆய்வு

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.