குறுகிய ஒற்றையாட்சி மனோநிலை அழிவுகளுக்கே வழிவகுக்கும்
சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்கு (SC Spl 03/2014 -Decided on 04/08/2017) தொடர்பாக இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் சிறிலங்கா உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. தற்போது இடம்பெறும் புதிய அரசியலமைப்பு மீதான விவாதமானது, அரசியலமைப்பு எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை போல் தெரிகிறது.