மேலும்

வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை – முற்றுகிறது முறுகல்

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில்  நேற்றிரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ நிதியாக 39 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மாநில அரசுகள் சிறிலங்காவுடன் நேரடித் தொடர்பை தவிர்க்க வேண்டும் – இந்திய மத்திய அரசு

எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நாடுகள் தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க சிறப்பு போர் படைகள் நான்கு வாரப் பயிற்சி

சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படையணிகளுக்கு அமெரிக்க  கடற்படையின் சிறப்பு போர் படை அதிகாரிகள்  அளித்து வந்த பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன.

யாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளுக்கான உடையில் ஞானசார தேரர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

சம்பந்தனுக்கு சார்பான சபாநாயகரின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடியாது

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக எவரும், நீதிமன்றத்தை நாட முடியாது என்று நாடாளுமன்ற அவை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார் மைத்திரி

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு விடுத்த போதும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.