மேலும்

மரண தண்டனை  – வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணிலிடம் அதிருப்தி

மரண தண்டனையை மீண்டும்  நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவினால் வெளிநாட்டுத் தூதுவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் தொடர்பு

அனைத்துலக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உதவியுடனேயே, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மரணதண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா விமானப்படைத் தளம் மீது கண் வைக்கும் ரஷ்யா

வவுனியா விமானப்படை தளத்தில், உலங்குவானூர்திகளைப் பழுதுபார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான, Rosoborone  சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத்  தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம.

முடிவு வந்தது கதிர்காமர் படுகொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு வெளியே 5ஆவது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு – ‘இராணுவம் -2019’ (International Military and Technical Forum – ARMY 2019) என்ற பெயரில்,  நடந்து கொண்டிருந்த போது, கொழும்பில் ஊடக ஆசிரியர்களிடம், ரஷ்ய ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை போடுவதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா

சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும்,  இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.