மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

இந்தியாவை அகற்ற கோட்டா-மொரகொட சூத்திரத்தைப் பயன்படுத்தும் அனுர

இந்தியாவின் நடுநிலையாளர் வகிபாகத்தை நீக்கச் செய்கின்ற கோட்டா- மொரகொட’ சூத்திரத்தை அனுரவும் பயன்படுத்துகின்றார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை நினைவேந்தல்- கனடியப் பிரதமர் கார்னியின் அறிக்கை

பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம்!- முள்ளிவாய்க்கால் பிரகடனம்

வரலாறு கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, தமிழ் தேசியத்தின் கீழ் ஒன்று கூடி, தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி, அதற்கான பெரு வழி வரைபடத்தை உருவாக்கி, எமக்காகவும், எம் தேசத்திற்காகவும், இன விடுதலைக்காகவும் இறந்துபோனவர்களின் கனவு நனவாக, இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து உறுதி பூணுவோம் என முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியப் பிரதமரின் செய்தி

தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா விலக வேண்டும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட இரகசியமான- ஆபத்தான பாதுகாப்பு உடன்பாட்டை உடனடியாக  ரத்துச் வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

அனுரவின் ஆட்சியில் 12 பேர் மீது பாய்ந்தது பயங்கரவாதத் தடைச்சட்டம்

சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர்  மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம்  எதிர்ப்பது அதற்கு கிடைத்த கௌரவம்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டதை, ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்துள்ள கௌரவம் என்று, பிராம்ப்டன் நகர முதல்வர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையிடம் அணுசக்தி பொருட்களை கண்டறியும் அதிநவீன கருவி

ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் அதிநவீன கருவித் தொகுதியை சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா கொடையாக வழங்கியுள்ளது.