மேலும்

பிரிவு: செய்திகள்

கோத்தா மீதான வழக்கு – சிறிலங்கா அதிபர் அதிருப்தி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான கொள்கை, சட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை.

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தைக் கைப்பற்ற இந்தியா வியூகம்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்திய கொள்கலன் கூட்டுத்தாபனம், கூட்டு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஐயோ

தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐயோ என்ற சொல், ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. ஒக்போர்ட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில், ஐயோ (Aiyo) என்ற சொல் உள்ளடக்கப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்க கூட்டமைப்பு இணங்கவில்லை – சுமந்திரன்

தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையை புதிய அரசியலமைப்பிலும் தொடர்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்தை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்குகிறது சிறிலங்கா

தென்மாகாணத்தில் சிறப்பு பொருளாதார வலயத்தை உருவாக்குவதற்கு, 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை ஆரம்பம்

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நாளை சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், நாளை தொடக்கம் எதிர் வரும் 15ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

புலிகளுடன் தொடர்புடைய அகதிகளை பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளது – சுவிஸ் அரசு

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று அடைக்கலம் கோரியவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை குறைந்துள்ளதாக சுவிற்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடலோரக் காவல்படைக் கப்பல்

இந்திய கடலோரக் காவல்படையின் மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பலான,  சமுத்ர பகீரெடர், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.