மேலும்

பிரிவு: செய்திகள்

அமெரிக்க நிலைப்பாடு சிறிலங்காவுக்குச் சாதகமாக மாறிவிட்டதா? – சமந்தா பவர் விளக்கம்

உண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள  மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவின் கண்டறிவுகள் – விசாரணைகளின் தொடக்கமாகுமா?

குறுகிய நாட்கள் மட்டுமே சிறிலங்காவில் தங்கியிருந்த போதிலும், நாட்டில் ஆரோக்கியமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு உண்மை மற்றும் நீதி போன்றன மிகவும் இன்றியமையாதவை என்பதற்கான ஒரு சாட்சியமாகவே ஐ.நா பணிக்குழுவின் பயணம் அமைந்துள்ளது.

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றமில்லை – மைத்திரியிடம் சமந்தா பவர் அதிருப்தி

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய முன்னேற்றங்களை காண்பிக்காதது குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

உறவினர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் புலிகளுக்கு உயிரூட்ட அனுமதியோம் – வாசுதேவ

போரில் உயிரிழந்த உறவினர்களை நினைவு கூருகின்ற போர்வையில் மீண்டும் புலிகளுக்கு உயிரூட்டுவதை அனுமதிக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி – ரணிலிடம் சமந்தா பவர்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் – கூட்டமைப்பு

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு, அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் வலியுறுத்தியுள்ளது.

வேறு நாடுகளின் கடற்படைத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவில் ஏனைய நாடுகளின் கடற்படைத் தளங்கள் அமைக்க இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இன்று ஆரம்பமான, சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறார் ஒபாமா- சமந்தா பவர்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறிலங்காவை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர்.