மேலும்

பிரிவு: செய்திகள்

நாடாளுமன்ற அனுமதி பெறாமல் ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது – சிறிலங்கா அரசு உறுதி

நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.

பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் அன்பளிப்பு – யாரும் எதிர்க்கவில்லை என்கிறது இந்தியா

சிறிலங்காவுக்கு இந்தியக் கடலோரக் காவற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அன்பளிப்பாக வழங்கியதற்கு, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார்.

எல்-நினோவின் பாதிப்பால் தென்னிந்தியா, சிறிலங்காவில் பெருமழை ஆபத்து – ஐ.நா எச்சரிக்கை

எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், சிறிலங்காவிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமானை நாடாளுமன்றத்துக்குள் தாக்க முயன்ற எதிர்க்கட்சியினர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர்.

கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம் – சிவராம் ஞாபகார்த்த மன்றம்

இன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.  அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் – அனைத்துலக ஊடகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.

மற்றொரு அமெரிக்க உயர்அதிகாரி அடுத்த வாரம் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  வரும் 14ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.