மேலும்

பிரிவு: கட்டுரைகள்

போர்க்குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை சமிக்ஞை

பிரேசிலுக்கான சிறிலங்கா தூதுவர் ஜெகத் ஜயசூரிய  கடந்த செவ்வாய் அதிகாலை தனது நாட்டிற்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இவர் சிறிலங்காவிற்குத் திரும்பியதாக சிறிலங்கா அரசாங்கம் பின்னர் அறிவித்தது. இவரது தூதுவர் பதவிக் காலம் முடிவடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஜெகத் ஜயசூரிய சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த காலப்பகுதியானது இது தொடர்பில் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

கடல் பாதைகளின் பாதுகாப்பு- சிறிலங்கா கடற்படையின் பங்கு என்ன?

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவியேற்பானது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இவர் தனது முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டில்  இவர்  ‘ஏடன் வளைகுடாவிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளைப் பாதுகாத்தல்’ என்பது எதிர்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் பிரதான வேலைத்திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம்

சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark  தற்போது தனது ஆறாவது  ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பணியின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை சீனக் கடற்படையின் மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

இந்தியாவுக்கு மத்தல – சீனாவின் கடன் அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வு

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் , கொழும்பிலிருந்து தெற்காக 250 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ள அம்பாந்தோட்டையில் சீனாவின் 190 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமா னநிலையம் அமைக்கப்பட்டது.  இந்த விமான நிலையத்தை அமைப்பதற்குத் தேவையான மொத்தச் செலவீனத்தின் 90 சதவீதக் கடனை சீனா வழங்கியது.

வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா

சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.

சீனாவின் கடன்பொறி – சிறிலங்கா முன் உள்ள சமநிலை சவால்

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம், சீன அரசிற்குச் சொந்தமான  China Merchants Port Holdings Company Limited (CMPort) நிறுவனத்துடன்  அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான  சலுகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.  இந்த உடன்படிக்கையின் பிரகாரம், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 70 சதவீத உரிமை சீன நிறுவனத்திற்கு வழங்கப்படுவதுடன் சிறிலங்கா துறைமுக அதிகாரசபைக்கு மீதிப் பங்கு உரிமையாக வழங்கப்படுகிறது.

அவுஸ்ரேலியாவை நோக்கி ஒரு கேள்வி

அவுஸ்ரேலிய ஆயுதத் தொழில்துறையை விரிவுபடுத்துவதற்கான அழைப்பை அண்மையில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோப்பர் பினே விடுத்திருந்தார். இந்த அழைப்பின் மூலம் அவுஸ்திரேலியாவானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து மிகப் பாரிய ஆயுத ஏற்றுமதியாளராக முடியும் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூலோபாய இலக்குகளும் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

ஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்

கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்!

சீனாவிடம் அம்பாந்தோட்டை – இந்தியா கவலைப்படுவது ஏன்?

துறைமுகங்களைக் கட்டுப்படுத்தும் சீன அரசிற்குச் சொந்தமான சீன மேர்ச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

மலபார் கூட்டுப் பயிற்சி – யாரைக் குறிவைக்கிறது?

யப்பானியப் போர்க் கப்பல்களான ஜே..எஸ் இசுமோ (JS Izumo)  மற்றும் ஜே.எஸ் சசனமி (JS Sazanami)  ஆகியன இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து மலபார் 2017 கடல் சார் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டமையானது யப்பானின் கடல் சார் ஆதிக்கம் தொடர்பான புதிய நிலைப்பாடு என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.