மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான வழக்குகளை வவுனியா நீதிமன்றில் இருந்து மாற்ற சதி?

போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டசிறிலங்கா படையினரை படுகொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக சாட்சியம் அளித்த இருவர் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

சம்பந்தனின் கோரிக்கையை நிராகரித்தார் மகிந்த

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் இன்று மாலை ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், இன்று பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அரை நூற்றாண்டுக்குப் பின் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக தமிழருக்கு வாய்ப்பு

சிறிலங்காவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவரை படைத்தளபதிகளில் ஒருவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சரவையில் அழுத்தம்

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குடாநாட்டில் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் – புலனாய்வு செயற்பாடுகளும் அதிகரிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வன்முறைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.