மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

இரண்டரை மணிநேர பேச்சுக்களை அடுத்து முடிவுக்கு வந்தது மைத்திரி- ரணில் மோதல்

சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள், இரண்டரை மணிநேரப் பேச்சுக்களை அடுத்து, சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

23 ஆண்டுகளில் முதியவர்களால் நிரம்பப் போகும் சிறிலங்கா

சிறிலங்காவின் தற்போதைய வயது நிலை தொடர்ந்தால், அடுத்த 23 ஆண்டுகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 வீதமானோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சிறிலங்கா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

ரணில் குடும்ப தொலைக்காட்சி மையத்தை மூடிய மைத்திரி – பனிப்போர் உச்சம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான ரிஎன்எல் தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, சிறிலங்கா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர்.

அமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தமிழர்கள்

அமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு மும்முனைப் போட்டி? – இன்று இரகசிய வாக்கெடுப்பு

பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கு இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் அனில் பராக்கிரம சமரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க ஆர்வம்

சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவரான மக் தோன்பெரி தெரிவித்துள்ளார்.

நாளை பிரதி சபாநாயகர் தெரிவு- சுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி

பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்?

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

நினைவேந்தலில் பங்கேற்ற அதிகாரிகளை பணிநீக்கிய வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரம்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கடந்த 18ஆம் நாள் நினைவு கூர்ந்த வங்கி அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து, குறித்த வங்கியில் கணக்குகளை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பலரும், தமது கணக்குகளை மூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.