மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மாலியில் கொல்லப்பட்ட சிறிலங்கா படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான சிறிலங்கா இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்கும் திட்டம் இல்லை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற போதும், அந்தப் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாலியில் இருந்து வெளியேறுமா சிறிலங்கா இராணுவம்?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய – சிறிலங்கா படைகள் தெற்கு கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சி

சிறிலங்கா படைகளுடன் இணைந்து ஜப்பானிய கடற்படையின் இரண்டு ஆழ்கடல் கண்காணிப்பு விமானங்கள், தென்பகுதி கடல்பரப்பில் கூட்டு கடல் கண்காணிப்பு பயிற்சி ஒத்திகையை மேற்கொண்டுள்ளன.

முன்னாள் தளபதிகள் இருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி?

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா வசமாகிறது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகள்

மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகளை சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்குகள் வழங்கப்பட்டது போல, மத்தல விமான நிலையத்தின் 70 வீதமான பங்கு இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.

அமெரிக்க விமானங்தாங்கிக்கு சிறிலங்காவில் இருந்து விநியோகம்

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கான பொருட்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

மாலியில் துருப்புக்காவி மீது கண்ணிவெடி தாக்குதல் – 2 சிறிலங்கா படை அதிகாரிகள் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில், துருப்புக்காவி ஒன்றில் பயணம் செய்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.