மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஜெனிவா வாக்குறுதியை புதுப்பித்துக் கொண்ட சிறிலங்காவுக்கு அமெரிக்கா வரவேற்பு

நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா புதுப்பித்துக் கொண்டுள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இந்தோ-பசுபிக் கட்டளைத் தளபதியுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில், சிறிலங்கா – அமெரிக்க கடற்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி அட்மிரல் டேவிட்சனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சிறிலங்காவில் இந்தியாவின் முதலீடுகளை சீனா எதிர்க்காது

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் கடத்தல் கடற்படை உயர்மட்டத்துக்கு தெரியும் – சிஐடி

கொழும்பில் சிறிலங்கா கடற்படையினர் சிலரால்  இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஷெகானி பெரேரா முன்னிலையில் தெரிவித்தனர்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்- இந்தியா

சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

இனப்போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்த மோசமான குற்றங்களுக்கு தீர்வு காணப்படாவிடின் சிறிலங்கா மீண்டும் மோதல்களுக்குள் சிக்க நேரிடும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் எச்சரித்துள்ளார்.

விமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்

சிறிலங்கா விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எந்த விசாரணைக்கும் அஞ்சவில்லை – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

போரின் போது சிறிலங்கா படையினர் எந்த தவறையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

திருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

சிறிலங்காவில் சூறையாடும் கடன் தந்திரத்தைக் கையாளும் சீனா – அமெரிக்க தளபதி குற்றச்சாட்டு

சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் சூறையாடும் கடன் தந்திரோபாயங்களை சீனா கையாளுகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் தெரிவித்துள்ளார்.